pcts_new
Untitled

அறப்பணி - 2021

  • 2020- ஆம் ஆண்டில் உதவி தேவைப்படும் எஸ்விஎஸ் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 50,000/ - நன்கொடையாக வழங்கப்பட்டது.  

  • 2021-இல் அதே பள்ளிக்கு ரூ.95,000/-நன்கொடையாக வழங்கப்பட்டது.

  • ஐஸ்வரியம் ட்ரஸ்டின் மூத்த குடிமக்களுக்கு ரூ,40,000/-நன்கொடையாக வழங்கப்பட்டது.
  • சதாராவில் கோவிட் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ரூ.9,747/- நன்கொடையாக வழங்கப்பட்டது.

 

கல்விக்கு உதவி

நமது தமிழ்ச்சங்கம் கடந்த 12 வருடங்களாக, தேவைப்படும் ஏழை மாணவர்களின் கல்விக்காக நிதியுதவி அளித்து வருகின்றது. மாணவர்களின் கல்விக்காக, ஆண்டு முழுவதற்குமான, கல்வி கட்டணத்தை சங்கம் ஏற்றுக்கொண்டு அதை செலுத்தி வருகின்றது.

கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக ஏழைகளுக்கு உதவுவதற்கான எங்கள் முயற்சிகள் தடைபட்டன. இருப்பினும், அது தளர்த்தப்பட்டபோது, தற்போதைய குழு (2021-2024), உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்களிடமிருந்து ரூ.95,000/-ஐ வெற்றிகரமாகத் திரட்டி 29.10.2021 அன்று எஸ்.வி.எஸ். பள்ளிக்கு நங்கொடையாக வழங்கியது. இது பள்ளி நிர்வாகத்தால் பெரிதும் பாராட்டப்பட்டது, ஏனெனில் இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய 19 குழந்தைகளுக்கான முழு ஆண்டுக் கட்டணத்தையும் செலுத்தியதாகிறது. மேலும் இதனால் ஊழியர்களின் நிலுவைத் தொகையையும் செலுத்தியதாகிறது.

ஒன்றோ (அ) அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி அளிக்க விருப்பமுள்ள அன்பர்கள் எங்களின் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக்கொண்டு தங்கள் விருப்பத்தை பதிவு செய்து உதவலாம்.

punecitytamilsangam@gmail.com

இந்த அறப்பணிகளை புரிய தாராளமாக நன்கொடையளித்த அனைத்து கருணையுள்ளங்களுக்கும் சங்கம் தன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.

 
Untitled Document